உடலுக்கு இதமான நல்லெண்ணெய் குளியல்

ஆரம்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று கூறுப்படுகிறது. தற்போது பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, மன அமைதி தேவையான ஒரு விடயமாக இருக்கின்றது. அப்படி பார்க்கும் பொழுது எண்ணெய் குளியல் சிறந்ததொரு தீர்வாக அமைகிறது. நெல்லிக்காய், செம்பருத்தி, கரிசாலை ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சிய நல்லெண்ணெயை தலைக்கு தேய்க்கலாம். இது முடி வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் இளநரையையும் தடுக்கிறது. … Continue reading உடலுக்கு இதமான நல்லெண்ணெய் குளியல்